இங்கிலாந்தை சேர்ந்த வோடஃபோன் நிறுவனம் இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் செல்ஃபோன் சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இந்தியா உள்பட 9 நாடுகளில் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன ஐஃபோன் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா, ஆஸ்திரேலியா, செக் குடியரசு, எகிப்து, கிரீஸ், இத்தாலி, போர்ச்சுகல், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள வோடஃபோன் வாடிக்கையாளர்கள் ஐஃபோன் சேவையை பெறுவார்கள் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐஃபோன் என்பது எச்டிஎம்எல் இ-மெயில் மற்றும் பிரவுசிங் வசதி கொண்ட மொபைல் ஃபோன். இதன்மூலம் இன்டர்நெட்டில் அநாயாசமாக பிரவுஸ் செய்யலாம்.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புக் மார்க்குகளை தானாகவே சின்கரனைஸ் செய்யும் வசதிகூட உண்டு. கூகுள், யாகூ சர்ச் இன்ஜின்கள் இன்பில்ட்டாக உள்ளது.
வயர்லெஸ் கனெக்ஷ்ன் மூலம் செய்திகள் அல்லது படங்களை இ-மெயிலில் அனுப்பிக் கொண்டிருக்கும்போதே தொலைபேசியிலும் பேசமுடியும். ஒரேநேரத்தில் பல இயக்கங்களை செய்யக்கூடியது ஐஃபோன்.
இந்தியாவில் ஐஃபோன்களை விற்பதற்கு முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஆப்பிளுடன் வோடஃபோன் ஒப்பந்தம் செய்துள்ளது.
Wednesday, May 7, 2008
இந்தியாவில் ஐஃபோன்: ஆப்பிள்-வோடஃபோன் ஒப்பந்தம்
Sunday, March 16, 2008
Wednesday, March 12, 2008
அமெரிக்காவில் ஐ.டி வருவாய் பாதிப்பு
அமெரிக்காவில் ஐ.டி வருவாய் பாதிப்பு
அமெரிக்கப் பொருளாதாரம் கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே மந்தமடைந்து வருகிறது.
இதனால் அந்த நாட்டை நம்பி இங்கு பிழைப்பு நடத்தும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வருவாய் விகிதத்தில் குறிப்பிடத்தக்க அளவு மந்த நிலை பிரதிபலிக்கலாம் என்று இந்த துறையை சேர்ந்த கணிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை துல்லியமாகக் கணிக்க முடியா விட்டாலும் முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களின் 4ம் காலாண்டு வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
டி.சி.எஸ் நிறுவனத்தின் 10 முன்னணி அமெரிக்க வாடிக்கையாளர்களில் இரண்டு நிறுவனங்கள் தங்கள் புரோஜெக்டுகளை தாமதப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. அதாவது இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது தகவல் தொழில் நுட்ப செலவினங்களை தாமதப்படுத்துவதாக, டிசிஎஸ் தலைமை செயல்பாட்டு அதிகாரி சந்திரசேகரன் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
டி.சி.எஸ் மட்டுமல்ல இன்னும் பல முன்னணி நிறுவனங்களுக்கு வந்து சேர வேண்டிய பணிகளும் தாமதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் 2008ம் ஆண்டு ஐ.டி. நிறுவனங்களுக்கு அவ்வளவு லாபம் தரும் ஆண்டாக இருக்காது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் வங்கிகள் சப் பிரைம் என்ற அநாயச கடன் திருவிழாவை நடத்தி வருவதால் அதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பல வங்கிகள் தங்களது தகவல் தொழில் நுட்ப பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.
Monday, March 3, 2008
கல்விக் கடன் ஒரே மாத்தில் வழங்கப்படும் : ப. சிதம்பரம்
கல்விக்கடன் ஒரே மாதத்தில் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது :
பொதுத் துறை வங்கிகளுக்கு கல்விக்கடன் வழங்க 15 முதல் 30 நாட்கள் தேவைப்படுகிறது.அதே சமயம் கல்விக்கடனை இணைய தளம் மூலம் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் பொதுத் துறை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
Monday, February 25, 2008
மாணவர்கள் பயன்படுத்த இலவச மென்பொருட்கள்
மென்பொருள் நிரல்களை உருவாக்குவதற்கும், செறிவான இணையதளங்களை வடிவமைக்கவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மாணவர்களுக்கு தங்களது மென்பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இதன்மூலம் அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் நேருக்கு நேர் வர்த்தகப் போட்டியில் இறங்கியுள்ளது மைக்ரோசாஃப்ட்.
மென்பொருள் நிரல்களை டவுன்லோடு செய்யும் விதமாக விஷுவல் ஸ்டூடியோ புரொபஷனல் (Visual Studio Professional) பதிப்பை மாணவர்கள் டவுன்லோடு செய்து பயனடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்டூடியோவில் கிராஃபிக் டிசைன், வெப்சைட் மற்றும் கலப்பு வெப்-டெஸ்க்டாப் நிரல்கள் வடிவமைப்பு உபகரணங்கள் உள்ளது.
மேலும் சிறப்பாக, எக்ஸ்.என்.ஏ கேம் ஸ்டூடியோ 2.0 ( XNA Game Studio 2.0) என்ற வீடியோ கேம் வடிவமைப்பு நிரலையும் இலவசமாக வழங்கியுள்ளது. எச்.கியூ.எல். சர்வர் 2005 பதிப்பையும், விண்டோஸ் சர்வர் ஸ்டாண்டர்ட் பதிப்பையும் மாணவர்கள் பயன்பாட்டிற்காக விட்டுக் கொடுத்துள்ளது.
முன்பு இந்த புரோகிராம்களுக்கு கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. இதனால் அதிக மாணவர்கள் இதனை பயன்படுத்தவில்லை. ஆனால் தற்போது ட்ரீம்ஸ்பார்க் என்று அழைக்கப்படும் இந்த இலவச மென்பொருள் வழங்கலை மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் இலவசமாக வழங்குவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், வேறு பல பயன்கள் உள்ளதாக அவர் கூறினார்.
இணையதளத்தை கண்டுபிடித்த திமோதி
இன்றைய தினம் அரிச்சுவடிகளான ஏ,பி,சி அல்லது அ,ஆ,இ தெரிகிறதோ இல்லையோ சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்திருக்கும் அட்சரம் www என்றால் அது மிகையாகாது.
உலகம் அனைவரது கையிலும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர் என்ற பெருமை திமோதி ஜான் பெர்னர்ஸ்-லீ-யையே சேரும்.
கடந்த 1990ம் ஆண்டில் இவர், தனது உடன் இருந்த ராபர்ட் கயிலியோ என்பவரின் துணையுடன் வேர்ல்ட் வைட் வெப் என்ற தகவல் சேகரிப்பு பிராஜக்டை ஏற்படுத்தியதன் விளைவாகவே இணைய தளம் என்ற உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஊடகத்தை நம்மால் இப்போது பயன்படுத்த முடிகிறது.
திமோதியின் இந்த அரிய கண்டுபிடிப்புக்காக லண்டனைச் சேர்ந்த அவருக்கு, ராணி இரண்டாவது எலிசபெத் மிகப்பெரிய அந்தஸ்தை சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் அளித்துள்ளார்.
லண்டனில் பிறந்த பெர்னர்ஸ்-லீ, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் குயின்ஸ் கல்லூரியில் பயின்றார். பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டரை பயன்படுத்த லீ-க்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்து அவர், தொலைக்காட்சி பெட்டி மற்றும் புதிய கம்ப்யூட்டரை வடிவமைத்தார்.
இதற்காக சால்டரிங் கருவியைப் பயன்படுத்திய போதுதான் கண்டுபிடிப்புகள் பற்றி யோசிக்கத் துவங்கினார்.
வேர்ல்டு வைடு வெப்-ஐ லீ உருவாக்கும் முன்பாக புரோகிராமர் ஆகவும், சாஃப்ட்வேர் டைப் செட்டிங்கிலும், ஆபரேட்டிங் சிஸ்டம் துறையிலும் கடந்த 1980-களில் அவர் பணி புரிந்துள்ளார்.
ஐரோப்பிய நிறுவனம் ஒன்றில் பெர்னர்ஸ்-லீ பணியாற்றும் போது ஹைபர் டெக்ஸ்ட் அடிப்படையிலான பிராஜக்ட்டின் போது வேர்ல்டு வைடு வெப்-க்கான ஐடியா கிடைத்தது.
தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பங்கீடு செய்து, அப்டேட் செய்யும் வகையிலான புரோட்டோ டைப் சிஸ்டம் என்குயர் என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டது. இந்த புரோகிராம் வெளியிடப்படாவிட்டாலும் வேர்ல்டு வைடு வெப்-க்கான ஆதாரமாக அமைந்தது.
அதன் பிறகு உலகின் முதல் இணைய தளம் (வெப் சைட்) உருவாக்கப்பட்டு அடுத்த கட்டத்திற்குச் சென்றது, வெப் சர்வருக்கு http என அழைக்கப்பட்டு டிசம்பர் 1990ல் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது உள்ள வெப் கேமரா போன்ற நவீன வசதிகள் அப்போது அதில் இருந்திருக்கவில்லை
:::Thanks- MSN.com ::::
மொபைல் டிவி குறிப்பிடத்தக்க அளவு வளரும்
நடப்பு ஆண்டில் (2008) மொபைல் டிவி எனும் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ச்சியை எட்டும் என மோட்டோரோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளவில் மோடோரோலா உள்ளிட்ட முக்கிய மொபைல் நிறுவனங்கள், மொபைல் டிவி சேவைகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.
மோட்டோரோலாவை பொறுத்தவரை சமீபத்தில் மொபைல் டிவி சாதனங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகள் இந்த டி.வி-யில் இடம் பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.
மொபைல் டிவி தொழில்நுட்பங்கள், ஒளிபரப்பு முறைகள் மற்றும் வளர்ச்சி குறித்து மோட்டோரோலா நெட்வொர்க் வர்த்தக மேலாளர் வெங்கட் ஈஸ்வரா விரிவாக எடுத்துக் கூறினார்.
குறைந்த விலை கார்: களமிறங்குது மாருதி
இந்தியாவில் குறைந்த விலை கார்களை டாடா நிறுவனம் முதலில் அறிமுகப்படுத்தி இருந்தாலும், இந்த வகை கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன.
கார் தயாரிப்பில் சிறந்து விளங்கும் மாருதி-சுசுகி நிறுவனமும் குறைந்த விலை கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, வரும் 2009ம் ஆண்டு இறுதிக்குள் டாடாவின் நானோ காருக்கு போட்டியாக, 660 சிசி இன்ஜினுடன் கூடிய புதிய காரை, ரூ.1.5 லட்சம் மதிப்பில் மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது.
எனினும் இத்திட்டம் குறித்து மாருதி சுசுகி நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் வெளியிடவில்லை என்றாலும், சுசுகி நிறுவனத்திற்கு உதிரி பாகம் தயாரித்து வழங்கும் பிரிவில், குறைந்த விலை காருக்கான பாகங்கள் விரைவில் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Monday, February 18, 2008
கணினி விலை கடுமையாக உயரும்
கணினி கலால் வரியை மத்திய அரசு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மாற்றியமைத்துள்ளதால், விலை கடுமையாக உயரும் என்று, அதன் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று கணினி என்பது தவிர்க்க முடியாத சாதனம். சாதாரணமாக அலுவலகப் பயன்பாட்டுக்கும், மேல்தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தும் சாதனம் என்ற நிலை தற்போது மாறியுள்ளது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் கணினியின் விற்பனை 48 சதமாக உயர்ந்திருக்கிறது.
தமிழகத்தில் மட்டும் தற்போது ஒரு மாதத்துக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணினிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
கணினிகள் அதன் திறனுக்கு ஏற்றார்போல் சந்தையில் ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 2 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 45 ஆயிரம் வரையிலான கணினி ரகங்களையே மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.
தற்போது கணினி விற்பனையில் 25 நிறுவனங்கள் உள்ளன. நமது நாட்டில் கணினி உதிரி பாகங்கள் சீனா, தைவான், அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, இங்கு அவைகள் ஒருங்கிணைக்கப்பட்டு முழு உருவம் அடைகிறது.
ஒரு கணினி, நிறுவனத்தில் இருந்து சந்தைக்கு செல்லும் போது, அதன் அடக்கவிலையில் மத்திய அரசு 16 சதம் கலால் வரியாக வசூலித்தது.
ஆனால், இதை கடந்த ஜனவரி 25-ம் தேதி மத்திய அரசு, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மாற்றியமைத்துள்ளது. அதாவது இதுவரை அடக்கவிலையில் கலால் வரி வசூலிக்கப்பட்ட நிலை மாறி, இனி அதிகபட்ச சில்லரை விற்பனை விலையில்(ஙதட)16 சதம் கலால் வரி வசூலிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் கணினியின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு அதன் தயாரிப்பாளர்களும், விற்பனையாளர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவின் மூலம் அரசு மறைமுகமாக கணினிகளின் விலையை ஏற்றியுள்ளது. இதனால் கணினிகளின் விலை 4 சதம் முதல் 7 சதம் உயர வாய்ப்புள்ளதாக அதன் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விலையில் "வாட்' வரி விதிக்கப்படும்போது, மேலும் கணினி விலை உயரும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக தற்போது ரூ. 10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படும் கணினிகள், இனி ரூ. 14,000 வரை விற்பனை செய்யப்படும். இந்த விலை உயர்வு கணினி சார்ந்த பொருள்களான பிரிண்டர், யுபிஎஸ், ஸ்கேனர் போன்ற பொருள்களுக்கும் பொருந்தும்.
நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்னரே, அரசு மறைமுகமாக கணினிகளின் விலையை உயர்த்தி இருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவது பள்ளி, கல்லூரி மாணவர்களும், நடுத்தர மக்களுமே ஆவார்கள்.
இந்த விலை உயர்வு வரும் திங்கள்கிழமை (பிப்.18) முதல் அமலுக்கு வரும் என்று கணினி விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் இந்த விலை உயர்வால், கணினியின் விற்பனையும் வீழ்ச்சி அடைய நேரிடலாம் என அகில இந்திய கணினி விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் எம்.வி. சங்கர் தெரிவிக்கிறார்.
மத்திய தகவல் தொடர்புத் துறை 2010-ம் ஆண்டுக்குள் வீடுகளுக்கு பயன்படும் கணினிகளை 75 மில்லியன் விற்பனை செய்வது என இலக்கு நிர்ணயித்து இருந்தது. இந் நிலையில் கணினி விலை உயர்ந்தால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியுமா என்ற சந்தேகம் எழத் தொடங்கியிருக்கிறது.
எனவே விலை உயர்வைக் கட்டுப்படுத்த, மீண்டும் அடக்கவிலையிலேயே கலால் வரி வசூல் செய்யப்பட வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
Tuesday, February 12, 2008
ETA-Ascon seeks jets for new airline
ETA-Ascon seeks jets for new airline
By Saifur Rahman, Business News Editor
Dubai: ETA-Ascon, one of the UAE's largest diversified conglomerates, is in talks with regional jet manufacturers Embrayer, Bombardier and ATR to acquire jets to start its new airline in India, a top official said.
"Yes, we have started talking to all three regional jet manufacturers - Embrayer, Bombardier and ATR - to acquire 70-90 seater regional jets for the new airline in India," Syed M. Salahuddin, managing director of the $4.3 billion Emirates Trading Agency-Associated Construction (ETA-Ascon) group, told Gulf News on Wednesday.
"We have already got the licence to start the airline. We are preparing for commercial launch in around October. It will be a regional airline."
New entry
ETA-Ascon group, a major player in shipping, trading, construction, real estate and power sectors, has recently entered into aviation business with Star Aviation - a new leasing entity.
"We already have eight aircraft leased to different airlines and the portfolio size is worth $200 million," Salahuddin said.
The group, jointly owned by Dubai's Al Ghurair Group and a group of non-resident Indians, which had grown its business through trading, shipping and construction, has further diversified its portfolio by entering into real estate, hospitality, cement production, steel manufacturing, retail, jewellery and food services.
It has rebranded its property and hospitality portfolio with ETA Star that has more than 15 million square feet of built-up area in the planning and construction, worth $10 billion.
It is also developing a Dh2 billion luxury neighbourhood - Dubai Lifestyle City in Dubai. "We are planning to develop Lifestyle Cities in other parts of the world," he said.
Shipping
However, the company which employs 58,000 people, is also expanding its core businesses. With 35 vessels, it owns the largest privately owned fleet.
"We have ordered 30 vessels worth $1.5 billion that will join our 35-strong fleet in four years. Among the new vessels, the ratio between bulk carriers and liquid will be 50:50. We are also expanding our liquid carriers fleet," he said.
"As 80 per cent of the global trade move by sea, we are enjoying our share of growth. Last year, we carried 25 million metric tonnes of cargo, which will go up to 30-35 million tonnes."
India expansion
ETA-Ascon group has been investing in India heavily as major opportunities are being unlocked by the Indian government.
"India provides the biggest opportunity for us and we see so much scope for growth," he said.
His company is currently planning and developing two townships in India's Bangalore and Chennai.
"However, investment in infrastructure could unlock opportunities in other areas. For example, we have recently started a cargo rail service (Railway Wagon) to move containers between Delhi and Bombay, which will expand to all other major Indian cities as the economy grows there."
http://www.gulfnews.com/business/Aviation/10188600.html
New Tamil channel very soon launch in Dubai.-Tamil News
துபாய் செல்லும் 'தமிழ் அரேபியா'
திருச்சி: தமிழ் அரேபியா என்ற தொலைக்காட்சி நிறுவனம் துபாயில் தனது ஒளிபரப்பை விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழ் அரேபியா தொலைக்காட்சி நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் ஆர்.உதயக்குமார் இதுகுறித்துக் கூறுகையில், துபாயில் எங்களது ஒளிபரப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். ஆரம்பத்தில் 2 மணி நேரம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். பின்னர் 24 மணி நேர சேனலாக மாறும்.
துபாயைச் சேர்ந்த அஜ்மான் ஸ்டுடியோஸ் எல்எல்சியுடன் இணைந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளோம்.
உலகம் முழுவதும் தமிழர்கள் பரவியுள்ளனர். குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் அதிக அளவில் தமிழர்கள் உள்ளனர். அவர்களின் திறமைகளை, சாதனைகளை வெளியுலகுக்கு பறை சாற்றும் வகையிலேயே துபாயில் எங்களது விரிவாக்கத்தை திட்டமிட்டுள்ளோம்.
இந்த நிகழ்ச்சிகளை நைஜீரியா, எகிப்து, லிபியா, மாரிடானியா, சோமாலியா, துனிஸ், சூடான், மொராக்கோ, ஈரான், ஈராக், ஜோர்டான், குவைத், லெபனான், ஓமன், பாலஸ்தீனம், கத்தார், சவூதி அரேபியா, சிரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுளில் பார்க்கலாம் என்றார் அவர்.
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
ஆன்லைன் ஷாப்பிங்: இந்தியர்கள் 3ம் இடம்
இணையதளம் மூலம் விற்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் அளவு ஆகியவை அதிகரித்துள்ளதோடு, பணம் செலுத்தும் முறையும் எளிதாக்கப்பட்டுள்ளதால் ஆன்லைன் ஷாப்பிங் இன்றைய காலங்களில் வளர்ச்சியடைந்துள்ளது. இதில் இந்தியர்கள், அதிகம் கொள்முதல் செய்பவர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளனர்.
துருக்கி மற்றும் அயர்லாந்து இணையவாசிகளுக்கு அடுத்தபடியாக இந்திய இணையவாசிகள் உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இதுபோன்ற ஆய்வுகளை சிறப்பன முறையில் செய்து வருவதாக கருதப்படும் நீல்சன் இந்த ஆய்வை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. உலகில் இணையதளம் பயன்படுத்துவோரில் 85 சதவீதத்தினர், ஆன்லைன் கொள்முதல் செய்வதாக நீல்சன் ஆய்வு தெரிவித்துள்ளது.
இதில் குறிப்பாக கடன் அட்டை மூலம் பொருட்களை இணையதளம் மூலம் வாங்கிக் குவிக்கும் போக்கு அதிகம் காணப்படுவதாக தெரிகிறது. நமது நாட்டு பெருந்தகைகள்தான் இப்படி என்று அல்ல துருக்கி இணையவாசிகள் 91 சதவீதமும், அயர்லாந்து இணையவாசிகள் 86 சதவீதமும் கடன் அட்டையை பயன்படுத்துவதில் முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர்.
ஐக்கிய அரபு நாடுகளின் இணையவாசிகளும் இதற்கு சளைத்தவர்களல்லர். அவர்களில் 84 சதவீதத்தினர் கடன் அட்டை மூலம் இணையதள ஷாப்பிங் செய்து பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர்.
உலககெங்கும் 60 சதவீத இணையவாசிகள் 60 சதவீதத்தினர் தங்கள் கடன் அட்டை மூலமே பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதில் 53 சதவீதம் விசா கார்டு பயன்படுத்தப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.
ஹைதராபாத்தில் 2வது மையம்: டிசிஎஸ் துவக்கம்
ஹைதராபாத்தில் 2வது மையம்: டிசிஎஸ் துவக்கம்
தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி துறையில் நாட்டின் முன்னணி நிறுவனமாக விளங்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தனது 2வது சர்வதேச வினியோக மையத்தை (Global Delivery Center) ஹைதராபாத்தில் திறந்துள்ளது.
சினர்ஜி பார்க் (Synergy Park) எனப் பெயரிடப்பட்டுள்ள இம்மையம், 8,000 பணிபுரியும் வகையில், 50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளதாக டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்-ஆளுமை, ஊடக சேவை, வங்கி மற்றும் சில்லரை வணிகம், டெலிகம்யூனிகேஷன் மற்றும் தகவல்தொழில்நுட்ப சேவைகளுக்கு தேவையான மென்பொருள் தீர்வைகளை இந்த மையம் வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டமத்திற்கான அங்கீகாரம் பெற்றுள்ள இந்த டிசிஎஸ் மையத்தை, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டச்-ஸ்கிரீன் செல்போன்: எல்ஜி அறிமுகம்
செல்போன் தயாரிப்புத் துறையில் உள்ள கொரிய நிறுவனமான எல்ஜி, தொடுதிரை (டச்-ஸ்கிரீன்) வசதியுடையை நவீன செல்போனை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஸ்பெய்னில் உள்ள பார்சிலோனாவில் நடந்த உலக மொபைல் மாநாடு மற்றும் வர்த்தக கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போன், 3 இன்ச் அகல தொடுதிரையை கொண்டுள்ளது.
கேஎப்-700 (KF-700) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்லைடர் (slider phone) ரக செல்போன் விரைவில் விற்பனைக்கு வரும் என எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் தனது மொபைல் விற்பனையை 25 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ள எல்ஜி நிறுவனம், நடப்பாண்டில் 100 மில்லியன் செல்போன்களை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரத்தன் டாடாவுக்கு குளோபல் இந்தியன் விருது
ஹைதராபாத்: நாஸ்காம் நிறுவனத்தின் குளோபல் இந்தியன் விருது டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவுக்குக் கிடைத்துள்ளது.
நாஸ்காம் நிறுவனத்தின் சார்பில் 2008ம் ஆண்டுக்கான குளோபல் தலைவர்கள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரத்தன் டாடாவுக்கு குளோபல் இந்தியன் விருது கிடைத்துள்ளது.
மும்பையில் வருகிற 14ம் தேதி நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.
குளோபல் இந்தியன் விருது தவிர பிசினஸ் டிரான்ஸ்பார்மேஷன் விருது, பிசினஸ் லீடர் விருது ஆகியவையும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரிட்டிஸ் ஏர்வேஸ் தலைமை செயல் அதிகாரி வில்லி வால்ஷுக்கு, பிசினஸ் டிரான்ஸ்பார்மேஷன் விருதும், சிஸ்கோ தலைவர் ஜான் சாம்பர்ஸுக்கு பிசினஸ் லீடர் விருதும் கிடைத்துள்ளது.
இந்த விழாவில் மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் ஆகியோருக்கு பாராட்டு விழாவும் நடைபெறும் என நாஸ்காம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tuesday, February 5, 2008
RCom cuts lifetime rates to Rs 199
RCom cuts lifetime rates to Rs 199
The slash in outgoing calls amount to around 50 per cent, compared with the present charges of outgoing calls that are pegged at around Re 1 per minute.
Analysts, tracking the sector, termed this “predatory” and said that other operators are likely to follow suit.
“This is another big offer from Reliance Communications. Sensing the need of the industry, we have slashed the prices further. This would make mobile telephony more affordable in the country and result in its increased penetration, especially in the rural segment,” RCom President (Personal Business) S P Shukla told Business Standard in an interview.
The schemes are also independent of handsets, and consumers can use it with their existing schemes, he added.
Under the new scheme, incoming is free, while local calls are pegged at around Rs 99 per minute (which is the industry practice). However, the company is providing options “to customise” the schemes, under which calls are billed at 49 paise for 60 seconds.
4th cable snaps, Qatar-UAE traffic disrupted - 2
Meanwhile, internet service providers (ISPs) in India, such as Sify, have begun issuing warning that the Net access of some international websites could be slow due to the cable ruptures.
FLAG Telecom said its repair ship was expected to reach the accident spot, 8 km off the Alexandria coast, by February 5. FLAG has arranged a part of the restoration capacity on i2i system east of India and restored the internet and IPLC traffic.
Tata group-owned Videsh Sanchar Nigam, a consortium partner and network administrator for SMW-4, said it restored a majority of its IP connectivity in the Middle East and North Africa (Mena) region.
59% growth in notebook sales in India
59% growth in notebook sales in India
| |
Canara Bank slashes interest on home loans
Canara Bank slashes interest on home loans
Bangalore: Canara Bank, the country's third largest public sector lender, has reduced the rate of interest on existing as well as new housing loans by 25 basis points with effect from February 7.
The slash in rate of interest is irrespective of loan amount and for all tenors upto 25 years, a Canara bank press release said on Tuesday.
All borrowers who have opted for home loan under the floating rate will get the benefit of interest reduction.
The revised rates for loans upto Rs 20 lakh will be 10 per cent for five year tenor, 10.25 per cent for 10 year tenor and 10.50 per cent for 10 to 25 years and for loans above Rs 20 lakh, it is 10.25 per cent, 10.50 per cent and 10.75 per cent respectively, it said.
Recently Canara bank had extended the maximum tenor of loans from 20 to 25 years and had also given the option of repaying the loan in step-up EMIs with a view to help borrowers in smooth servicing of the loan.
The processing charges on home loans has also been reduced by 50 per cent up to March three, 2008.
© Copyright 2008 PTI. All rights reserved.
Reliance Infratel to raise Rs 6,000 cr via IPO
Reliance Infratel to raise Rs 6,000 cr via IPO
Mumbai: Reliance Infratel, the tower subsidiary of Reliance Communications, has proposed to raise Rs 6,000 crore through an Initial Public Offering (IPO) and has filed the Draft Red Herring Prospectus with the Securities and Exchange Board of India (SEBI).
The Anil Ambani group company has proposed to offload 10.05 per cent stake to the public, which puts the valuation of the company at around Rs 60,000 crore. The IPO follows that of another group company, Reliance Power, which is to be listed on February 11.
According to the DRHP, Reliance Infratel has proposed to offload 8,91,64,100 equity shares of Rs 5 each at a price that will be decided through the book building process.
The issue proceeds will be utilised to finance development of passive infrastructure sites and for general corporate purposes. Upon the completion of the listing, the company intends to list the shares both on BSE and NSE.
Around 60 per cent of the issue will be allocated to Qualified Institutional Buyers (QIBs), with 5 per cent for mutual funds, and 30 per cent to be allocated on a proportionate basis to retail individual bidders.
Source: BUsiness Standard
