Tuesday, May 27, 2008

ஜனவரிக்குள் "3ஜி' தொலைதொடர்பு சேவை

வரும் ஜனவரிக்குள் "3ஜி' தொலைதொடர்பு சேவை நடைமுறைக்கு வரும் என்று மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தெரிவித்தார்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அசோசம் அமைப்பின் சர்வதேச தொலைதொடர்புத் துறை உச்சி மாநாட்டில் பேசும்போது அமைச்சர் இத் தகவலைக் கூறினார்.

இன்டர்நெட் தொடர்பு வேகமாகக் கிடைக்க இந்த 3ஜி தொலை தொடர்பு சேவை பெரும் உதவியாக இருக்கும்.

3ஜி சேவைக்கான வழிகாட்டி நெறிமுறை வரைவு நகல் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுவிட்டது. வழிகாட்டி நெறிமுறைகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று அமைச்சர் கூறினார்.

3ஜி தொலைதொடர்பு சேவையில் அன்னிய நிறுவனங்களை அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில் தற்போதுள்ள தொலைதொடர்பு நிறுவனங்களையும் பங்கு பெற அனுமதிக்குமாறு ட்ராய் ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளது.

அலைவரிசை ஒதுக்கீடு ஏலத்தில் (நல்ங்ஸ்ரீற்ழ்ன்ம் ஹன்ஸ்ரீற்ண்ர்ய்) அன்னிய நிறுவனங்கள் பங்கு பெற அனுமதிப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் விவாதிக்க இருப்பதாக அமைச்சர் கூறினார்.

அன்னிய நிறுவனங்களை அனுமதிப்பதில் பிரச்னையில்லை. தொலை தொடர்புத் துறையில் 74 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அரசு கொள்கை ரீதியாக முடிவு செய்துள்ளது என்றார் அமைச்சர் ராசா.

Wednesday, May 7, 2008

இந்தியாவில் ஐஃபோன்: ஆப்பிள்-வோடஃபோன் ஒப்பந்தம்

Apple - iPhone
டெல்லி: இந்தியாவில் ஐஃபோன்களை விற்க முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஆப்பிளுடன் வோடஃபோன் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த வோடஃபோன் நிறுவனம் இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் செல்ஃபோன் சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இந்தியா உள்பட 9 நாடுகளில் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன ஐஃபோன் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா, ஆஸ்திரேலியா, செக் குடியரசு, எகிப்து, கிரீஸ், இத்தாலி, போர்ச்சுகல், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள வோடஃபோன் வாடிக்கையாளர்கள் ஐஃபோன் சேவையை பெறுவார்கள் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐஃபோன் என்பது எச்டிஎம்எல் இ-மெயில் மற்றும் பிரவுசிங் வசதி கொண்ட மொபைல் ஃபோன். இதன்மூலம் இன்டர்நெட்டில் அநாயாசமாக பிரவுஸ் செய்யலாம்.

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புக் மார்க்குகளை தானாகவே சின்கரனைஸ் செய்யும் வசதிகூட உண்டு. கூகுள், யாகூ சர்ச் இன்ஜின்கள் இன்பில்ட்டாக உள்ளது.

வயர்லெஸ் கனெக்ஷ்ன் மூலம் செய்திகள் அல்லது படங்களை இ-மெயிலில் அனுப்பிக் கொண்டிருக்கும்போதே தொலைபேசியிலும் பேசமுடியும். ஒரேநேரத்தில் பல இயக்கங்களை செய்யக்கூடியது ஐஃபோன்.

இந்தியாவில் ஐஃபோன்களை விற்பதற்கு முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஆப்பிளுடன் வோடஃபோன் ஒப்பந்தம் செய்துள்ளது.